27 மார்ச், 2010

பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதம்





200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம்



மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பரப் பாங்கண்டல் பிரதேசத்தில் துரிதகதி யில் புதிய வீடுகளை நிர்மாணிப்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திரு மதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரி வித்தார்.

பரப்பாங்கண்டல் பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

பரப்பாங்கண்டல் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் கணிசமானோருக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுத் தொகை வழங்கப் பட்டிருக்கின்றது.

ஏனையோருக்கும் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பி ட்டார்.

இவை தவிரவும் அப்பகுதிகளில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைக ளையும் மேம்படுத்தும் பொருட்டு அனுமதிபெற்ற சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தற்காலிக வீடுகள், நிரந்தர வீடுகள் உள்ளடங்கலாக பல தேவைகளை யும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற் பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரு வதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக