27 மார்ச், 2010

வடக்கில் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிப்பு

வவுனியா நலன்புரி நிலையத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஒருகட்டமாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள வவுனியா வடக்குப் பகுதியைச் சேர்ந்த 540பேர் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 1150பேர் நேற்றையதினம் அவர்களது சொந்த இடமான கிளிநொச்சி கரைச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா நலன்புரி நிலையங்களில் 76,000பேர் மாத்திரமே இன்னமும் எஞ்சியுள்ளதாகவும் அவர்களும் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக