24 ஆகஸ்ட், 2009

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சமீது தாக்குதல் நடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-




பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்வதற்காக கொழும்பில் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் தொகுதியொன்றினை புலனாய்வுப் பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை) பிரதேசத்திலேயே இந்த ஆயுதத் தொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ்அத்தியட்சகர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இப்பிரதேசத்திலுள்ள கட்டிடத் தொகுதியிலிருந்த இரும்புப் பெட்டகமொன்றிலேயே இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த வெடிபொருட்களைப் பொருத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றின்மூலம் பிரமுகர் வாகனத் தொடரணிமீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதன்போது பாதுகாப்புச்செயலர் உயிரிழக்காத பட்சத்தில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் வாகனத்தை குறிவைத்து பெண் தற்கொலைக் குண்டுதாரியைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் திட்டங்களைத் தீட்டிய சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக