24 ஆகஸ்ட், 2009

வடகடலில் மீன்பிடிக்கச் செல்வோர்மீது கெடுபிடிகள் அதிகரிப்பு-


(2009-08-23 22:12:50)

வடபகுதிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6மணிக்கு முன் கடலுக்குச்சென்று மறுநாள் காலை 6மணிக்குப் பின்பே கரைக்குத் திரும்பவேண்டுமென்று தெரிவித்துள்ள வடபிராந்தியக் கடற்படைத் தளபதி இரவுநேரங்களில் எவரும் கடலுக்கு செல்வதற்கோ அல்லது திரும்பி வருவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் கூறியுள்ளார். வடகடலில் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைகளை வடபிராந்திய கடற்படைத் தளபதி யாழ்.அரச அதிபருக்கு அறிவித்துள்ளார்;. இந்த நிபந்தனைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய யாழ்.அரச அதிபர் அவற்றைத் தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். பகலில் மாத்திரம் மீன்பிடிக்கச் செல்வோர் அதிகாலை 4மணிக்கு புறப்பட்டுச்சென்று இரவு 7மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும். சகல மீன்பிடிக் கலங்களும் இரவில் வெளிச்சத்துடன் தரித்து நிற்கவேண்டும். வழமையான மரக்கலங்களில் வெளிச்சக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சு செய்து கொடுக்கவேண்டும். வெளியிணைப்பு இயந்திரமாக 15வரையான குதிரை வலுவுடைய இயந்திரங்கள் மாத்திரமே பாவிக்க முடியும். அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் கடற்றொழில் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக