25 ஆகஸ்ட், 2009

தமிழகபொலிசாரிடம் இலங்கை அரசு கோரிக்கை


தமிழகத்தில் கடந்த ஜூலையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திய கடலோரக் காவல்படையிடம் அரசாங்கம் கோரியுள்ளது. இராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஜூலைமாதம் 31ம்திகதி குறித்த மூன்று இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலீசார் கோரியிருப்பதாக இந்திய கடலோரக் காவல்படையினர் கூறியுள்ளனர். அவர்களை இலங்கைக்கு ஒப்படைப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக