24 ஆகஸ்ட், 2009

கொலரடா கப்பலில் எடுத்துவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் இன்னமும் கொழும்பு துறைமுகத்தில் முடக்கம்-

(2009-08-23 22:09:40)

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு கொலராடோ கப்பல்மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதுடன் அடுத்தவாரம் முற்பகுதியில் அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கான சாத்தியமுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தேசிய செயலர் நிமால் குமார் கருத்துத் தெரிவிக்கையில்;, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு விநியோகிக்கும் முகமாக எமது சங்கத்துக்கு 650தொன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியில் எடுப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடைமுறை செயற்பாடு பூர்த்தியாகாததன் காரணமாகவே வெளியிலெடுக்க முடியாதுள்ளது. இப்பொருட்கள் வெளியில் எடுக்கப்பட்டதும் இதனை வவுனியாவுக்குக் கொண்டுசென்று மூன்று நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கொன ரூபா 4மில்லியனை ஒதுக்கியுள்ளோம். அநேகமாக அடுத்தவார முற்பகுதியில் இப்பொருட்கள் வெளியிலெடுக்கக் கூடியதாகவிருக்குமென நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக