24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 10



தாயகக்குரல் (08.07.2009)கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களை மனதில் கொண்டு ஒரு சரியான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்மைப்பு எடுக்கவேண்ட

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி கூட்டம் கடந்த 4ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டமை முக்கிய நிகழ்வாகும். கடந்த மூன்று வருடங்களாக ஜனாதிபதியுடன் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தோல்விக்குப் பின்னரே ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அந்தக் கூட்டதில் கலந்து கொண்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த காலங்களில் முக்கிய எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி; மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியன அரசாங்கத்துடன் பேசுவதை தவிர்த்து வந்தன. இக்கட்சிகளும் இப்போது ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் அழைத்ததற்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி;, பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை தாமதமின்றி அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தல், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்தல், சகல பிரதேசங்களையும் பேதமின்றி அபிவிருத்தி செய்தல் என்பன பற்றி விளக்கி இவற்றை அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் செயல்படுத்தப்போதாகத் தெரிவித்தார்.
ஹெலஉருமய, ஜே.வி.பி. போன்ற இனவாதக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் மீள்குடியேற்றத்தையும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருந்தன. ஆனால் இனப்பிரச்சினைக்கு எப்படிப்பட்ட தீர்வு காணப்படவேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை.
இனப்பிரச்சினை தொடர்பாக பிரதான எதிர்கட்சிகள் பொதுவாக அரசியல் தீர்வின் அவசியத்தை ஏற்றுக்கொண்டபோதிலும் ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே சர்வ கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்குடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன இந்தக் குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினை தொடர்பான தமது கருத்தை வலியுறுத்தவோ அல்லது தமது நிலைப்பாட்டை மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்காமலே இவர்கள் வெளியில் நின்று இந்தக் குழுவையும் அரசையும் விமர்சித்து வந்தன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இனப்பிரச்சினை தொடர்பாக இதுவரை நிலையான கொள்கைகள் எதுவும் கிடையாது.
இனப்பிரச்சினைக்கு குறைந்த பட்சத் தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட (பதின்மூன்றாவது திருத்தம் ) தீர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஜே.வி.பி. தீவிரமாக எதிர்க்கிறது. பதின்மூன்றாவது திருத்தம் பிரிவினைக்கு வழி கோலுவதாக ஜே.வி.பி கூறுகிறது. பிரிவினைக் கோரிக்கைக்கு மாற்றாகவே பதின்மூன்றாவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. பதின்மூன்றாவது திருத்தம்; தனிநாட்டு கோரிக்கையை மழுங்கடித்துவிடும் என்பதாலேயே புலிகள் அதை எதிர்த்தார்கள் என்பதற்கான காரணமாகும்.
பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பாக அரசாங்க தரப்பிலேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலரும், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடிய அதிகாரங்களைக் கொண்ட தீர்வு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலரும் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடாது என்று இன்னும் சிலரும் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பல கட்சிகள் கொண்ட கூட்டணி. இந்தக் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதை பேசி தீர்க்காமல் அரசாங்கத்தில் பங்குகொண்ட கட்சிகள் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையே ஏற்படுத்தும்.
அரசியல் தீர்வு யோசனை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அராசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப்போல் இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வு காணமுடியும் எனவும் எனவே இதற்கு தனக்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனை ஒருமாதத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் இதுகுறித்து பொது இணக்கப்பாடு கண்டபின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும் மக்கள் அங்கீகாரம் கிடைத்தால் யார் எதிர்த்தாலும் அத்தீர்வு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகளின் வழி தமி;ழ் மக்களை அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் புலிகளின் தவறான செயற்பாட்டை பலர்; விமர்சனம் செய்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ~~விளக்கை பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதுபோல|| புலிகளின் அணுகுமுறைகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. புலிகள் இனப்பிரச்சினையை சிக்கலாக்கியது மாத்திரமல்ல தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடி இருக்கின்றனர். அரசியல் தீர்வைப் பொறுத்தவரை தனிநாட்டுக் கோரிக்கை காலாவதியாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்பதே யதார்த்தபூர்வமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன்னர் இனப்பிரச்சினை தொடர்பாக யதார்த்தத்திற்கு முரணான அணுகுமுறையால் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களை மனதில் கொண்டு ஒரு சரியான யதார்த்தபூர்வமான நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்மைப்பு எடுக்கவேண்டும். கடந்தகால படிப்பினைகளில் இருந்து பாடம் கற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முடிவை எடுப்பார்கள் என நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக