24 ஆகஸ்ட், 2009

காலி கடற்பரப்பில் தாக்குதல் நடத்த புலிகளினால் அனுப்பப்பட்ட டோறா மற்றும் லொறி மீட்பு-

காலி கடற்பரப்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக புலிகளினால் அனுப்பிவைக்கப்பட்ட டோறா படகு மற்றும் லொறி என்பவற்றைப் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த இயந்திரங்கள் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். மத்திய மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து கண்டியில் வைத்து இந்த இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 25ம் திகதி மொறட்டுவைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்த இயந்திங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக