27 ஜூன், 2010

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்க அரசு முடிவு


சகல அத்தியாவசியப் பொருட்களை யும் இறக்குமதி செய்து குறைந்த விலையில் பாவனையாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது. இவ்விடயம் தொடர் பாக வெளிநாட்டு நிறுவனங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பர் னாண்டோ தெரிவித்தார்.

இதுவரை காலமும் அத்தியா வசியப் பொருட்களின் விலைகளை தனியார் துறையினரே தீர்மானித் தனர். இனி அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்பதுடன் நிர்ணய விலை யில் அனைத்துப் பொருட்களையும் பாவனையாளர்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அர சாங்கம் மேற்கொண்டுள்ள செயற் திட்டங்களை விளக்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் பொருட்களின் தர உத் தரவாதத்தை உறுதிப்படுத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் தற்போது 200 கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் இயங்கி வரு கின்றன. மேலும் 50 விற்பனை நிலை யங்கள் எதிர்வரும் மாதத்தில் புதி தாகத் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய வலையமைப்பை மேலும் பலப்படுத்தி தனியார் துறை சுப்பர் மார்க் கட்டுகளுக்கு நிகரானதாக அவற் றைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக் கப்படும்.

இதற்கிணங்க முதற் கட்டமாக சகல கூட்டுறவு மொத்த விற்தீனை நிலை யங்களுக்கூடாகவும் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்படும்.

இதற்கென குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச வர்த்தக நிறுவனங்களை இனங்கண்டு அவற் றுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகின்றன. தற்போது நியூசி லாந்து கம்பனியொன்றுடன் பால்மா கொள்வனவு தொடர்பாக பேச்சுவார்த்தை கள் மேற்கொள்ளப்படுகின்றன.

காத்திரமான செயற்திட்டமொன்றி னூடாக குறைந்த விலையில் சகல பொருட் களையும் நாட்டின் சகல பகுதிகளிலும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அரசாங்கம் விரைவாக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும். இதனூடாக தனியார்துறை வர்த்தக ஏகாதிபத்தியத்து க்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக