27 ஜூன், 2010

இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் அவசியம் தேவை : அமெரிக்கா



இலங்கையின் எதிர்கால நலனுக்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அவசியம் தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார். .

நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். .

மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக