27 ஜூன், 2010

இலங்கையரின் சட்டவிரோதக் குடியேற்றம் குறித்து விரைவில் தீர்மானம்: ஜூலியா கில்லார்ட்

இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை குறித்தத் தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் கெவின் ரொட் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தார்.இந்தத் தீர்மானம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில், முன்னர் பிரதமராக பதவி வகித்திருந்த கெவின் ரூட் அரசியல் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் சென்ற இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தர்கள் தொடர்பில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக