27 ஜூன், 2010

ஐநா நிபுணர் குழு நியமனம் : அணிசேரா நாடுகள்-சீனா எதிர்ப்பு



இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் நிபுணர் குழு நியமனத்திற்கு அணி சேரா நாடுகள் மற்றும் சீனா ஆகியன எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் இந்த நிபுணர்கள் குழு ஆராயந்து, பான் கீ மூனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

நிபுணர் குழு நியமனம் தொடர்பிலான நிலைப்பாடுகளை அணிசேரா நாடுகளும், சீனாவும் ஜனாதிபதியிடம் கேட்டறிந்து கொண்டன. இதனையடுத்து அவை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நிபுணர்கள் குழுவை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் பேரவை அல்லது பொதுச்சபையில் அனுமதி பெற்றிருக்க வேண்டுமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா நிபுணர்கள் குழு நியமனத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு நியமனத்திற்கு அணி சேரா நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக