26 ஜூன், 2010

இடம்பெயர்ந்த மக்கள் கோயில் தரிசனம்

மயிலிட்டி பகுதியில் ஒரு கோயில்
மயிலிட்டி பகுதியில் ஒரு கோயில்
கோயில்கள் பராமரிப்பின்றியும் சேதமடைந்தும் போயிருந்தன

இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதி ஒன்றில் உள்ள ஆலயங்களை ஒரு முறை தரிசித்து திரும்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வடக்கே யாழ் குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் மயிலிட்டியில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வர அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வெள்ளியன்று இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.

தாங்கள் கற்பனையில் எதிர்பார்த்திருந்ததைவிட நிலைமைகள் வேறான இருந்ததாகவும், இருபது வருடங்களுக்குப் பின்னர் தமது ஊரைப் பார்த்த மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கண்ணீர் சொரிந்து மகிழ்ந்ததாகவும், இடப்பெயர்வுக்கு பின்னர் பிறந்தவரான உருத்திரமூர்த்தி கவிந்தன் என்ற 19 வயது இளைஞன் தெரிவித்தார்.


அடுத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இன்றுதான் எனது சொந்த ஊரை நேரில் சென்று பார்த்திருக்கேன்.

உருத்திரமூர்த்தி கவிந்தன்

மக்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர்

தங்களை கோவிலைச் சூழ்ந்த இடத்திற்கு அப்பால் செல்வதற்கு இராணுவம் அனுமதிக்காததனால், ஊருக்குச் சென்றோம் என்ற மகிழ்ச்சியுடன் கவலையும் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் எப்போது நடைபெறும் என்பது தெரியாத நிலையில், உற்சவகால நன்னாளில் ஊருக்குச் சென்று இரண்டு ஆலயங்களில் பூஜை வழிபாடுகளைச் செய்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக