27 ஜூன், 2010

அடிப்படை வசதிகளின்றி மீள்குடியமர்வு : மாந்தையில் மக்கள் அவலம்

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சவராய் சீது விநாயகர் குளம் பகுதி மக்கள், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் இதனால்அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவராய் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும், சீது விநாயகர் குளம் பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 112 பேரும் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராமங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

எனினும் போக்குவரத்து பிரச்சினை தற்போது காணப்படுவதாகவும் தங்களுடைய கிராமத்திலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்ற பின்னரே பஸ்ஸில் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்.

எனவே முதலில் உடனடியாக தங்களுடைய கிராமத்திற்குப் போக்குவரத்து வசதியை செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் அம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக