27 ஜூன், 2010

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசை தி.மு.க




இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐ.நா.சபை உட்பட உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட 1500 கோடி ரூபா பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று மத்திய அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.திமு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிகையில் தெரிவித்துள்ளார். மேற்படி அறிக்கையில் அவர் மேலும் குறிப் பிட்டிருப்பதாவது,

அவ்வறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்ப வில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை, எடுப்பதாகவும் தெரிய வில்லை. தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, தமிழர் வாழ் பகுதியான வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணு வம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தமிழில் பெயர் வைக்கப்படடிருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்க ளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகிய வற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், பௌத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடம் பெயர்ந் துள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்படியே அனுப்பினாலும் அங்கு சென்று அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? இந்த நிலைமையில், தமிழர்களின் மறுவாழ்வுக் காக 1,500 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு அளித்திருக்கிறது. வெறும் நிதி உதவியை சிங்கள அரசிடம் அளித்ததன் காரணமாக, அங்குள்ள தமிழர்க ளுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவ தில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ரூ.1,500 கோடி பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்கள மயமாக்கப்படுவதாக செய்திகள் வருவது குறித்து ஆராய்ந்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கை களான மறுவாழ்வு, விவசாய நிலங்களை சீரமைத்தல், நீர் ஆதாரங்களை சீரமைத்தல், கல்வி நிறுவனங்களை சீரமைத்தல், வழிபாட்டுத் தலங்களை கட்டித் தருதல், அனைத்து நிவாரண உதவிகளும் பாதிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்துதல், பத்திரிகையாளர்களை அனுமதித்தல் போன்ற பணிகளை இலங்கை அரசு மேற்கொள்கிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற் கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண் டும். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூர் எம்.ஜி. வீதி, மகாத்மா காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும் நடைபெறும்''என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக