27 ஜூன், 2010

பயணிகள் சேவைக்கான விமானங்கள் வாங்க விடுதலைப் புலிகள் திட்டம்?






புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு பயணிகள் சேவைக்கான விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ-380 ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களை வாங்கி "ஈழ விமான சேவை" என்ற பெயரில் அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளனர் என்று இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்கள மொழிப் பத்திரிகையான "திவயின" தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவரான ருத்திரகுமாரன் இதற்கான யோசனையை வழங்கியதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக