27 ஜூன், 2010

வன்னி மீள்குடியேற்றம், அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு

வன்னி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி முன்னெ டுப்புகள் குறித்த விசேட மாநா டொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை எதிர்வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் ஜனாதிபதி செயலகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம்.எஸ். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கு வது குறித்தும் இங்கு ஆராயப்படும். மீள்குடி யேற்ற பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன் னேற்றம் குறித்தும் இங்கு பரிசீலிக் கப்படும்.

வவுனியா மாவட்டத்தில் வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் முழு மையான மீள்குடியேற்றம் நடை பெற்றுள்ளது.

தற்போது நெடுங் கேணியில் பாரிய அபி விருத்தி வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. நகரம் வழமைக்கு திரும்பிவிட்டது. வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பிரதேச செயலாளர் தெரி விக்கின்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக