21 ஏப்ரல், 2010

அவசரகால சட்டம் புதிய நாடாளுமன்றத்தின் மூலம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை-

அவசரகால சட்டம் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்றத்தின் மூலம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. அவசரகால சட்டத்தின் கீழேயே இலங்கையில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை இக்கோரிக்கையை விடுத்துள்ளது. 1971ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்துவரும் அவசரகால சட்டம் மற்றும் அவசரகால விதிகள் என்பவற்றைக் களைந்து மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டுமென்றும் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கை முன்நோக்கிச் செல்லவேண்டுமாயின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றைத் தட்டிப்பறிக்கும் சட்டங்களை நீக்க வேண்டுமென மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக