21 ஏப்ரல், 2010

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீச்சு!

பஞ்சாப் மாநிலத்தில் எல்லையையொட்டிய பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிலைகள் மீது திங்கள்கிழமை அதிகாலை அத்துமீறி 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் பாகிஸ்தான் படையினர். இத் தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் படைகளின் அத்துமீறலையடுத்து அப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த சிம்பல் பகுதியில் அவர்கள் அணிவகுப்பை திங்கள்கிழமை நடத்தினர். மேலும் அப் பகுதி கடும் உஷார் நிலைக்கு கொண்டு ரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக