21 ஏப்ரல், 2010

தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல், வியாபாரம் செய்தல் மே 1 முதல் தடை

மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று கூறினார்.

இந்த முடிவு குறித்து பொலிஸ் மா அதிபரையும் போக்குவரத்து அமைச்சையும் அறிவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ்ஸினுள் பிச்சை எடுப்பதாலும் வியாபாரம் செய்வதாலும் பயணிகளுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுவதாகக் கூறிய அவர், பஸ்களில் பிச்சை எடுப்பதன் மூலம் 4 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை ஒரு பிச்சைக்காரர் வருமானம் ஈட்டுவதாகவும் கூறினார்.

பிச்சை எடுப்பதன் பின்னணியில் சில கும்பல்கள் இயங்குவதாகவும், இதனை தடுப்பதன் மூலம் குறித்த கும்பல்களால் அச்சுறுத்தல்கள் ஏற் படலாம் என்றும் கூறிய அவர், அது தொடர்பில் பொலிஸாரின் உத வியை நாட உள்ளதாகவும் தெரிவித் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக