21 ஏப்ரல், 2010

திருமலை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. பெரு வெற்றி

சம்பந்தனுக்கு அதி கூடிய விருப்பு வாக்கு

திருகோணமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் எடுத்துள்ளன. தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் அந்தக் கட்சியினால் ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற முடிந்துள்ளது. இந்த முடிவின் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதென்பதையே தெளிவாக்குகிறது.

ஐ. ம. சு. மு இந்த மாவட்டத்தில் 59,784 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ. தே. க. 39,691 வாக்குகளையும், தமிழரசுக் கட்சி 33, 268 வாக்குகனையும், பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. அதிகூடிய வாக்கு

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இரா. சம்பந்தன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார். 24, 488 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக ஐ. தே. க. வில் போட்டியிட்ட எம். எஸ். தெளபீக் 23, 588 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

ஐ. ம. சு முவில் போட்டியிட்ட சுசந்த புஞ்சிநிலமே 22,820 வாக்குகளையும் எம். கே. டி. எஸ். குணவர்தன 19,734 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக