21 ஏப்ரல், 2010

இந்திய பெண்கள் பிரதிநிதிகள் - கி.மா. முதலமைச்சர் சந்திப்பு




முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

சேவாலங்கா நிறுவனத்துடன் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து இப்பிரதிநிதிகளுடனான விஜயத்திற்குப் பங்களிப்பு வழங்கினர்.

மாவட்டத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பு இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உமா தேவி சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

முதலமைச்சரின் மீள்குடியேற்ற பணிப்பாளர் அ.செல்வேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், ஊடக செயலாளர் ஏ.தேவராஜன் உட்பட கிழக்கு மாகாண சபை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய பெண்கள் பிரதிநிதிகள் தரப்பில் மேற்படி அமைப்பு இணைப்பாளர்களான மேகாதேவி, வீணா சர்மா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களின் பிரச்சினை, பெண்களின் சுய தொழில் வாய்ப்பு , பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப நிலவரம் என்பன குறித்தும் முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய பிரதிநிதிகள் குழுவினரிடம் எடுத்து விளக்கினர்.

மேலும் பல பகுதிகளுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக