21 ஏப்ரல், 2010

பிரபாவின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் கிடையாது : கருணாநிதி



பிரபாகரனின் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டமைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அ.தி.மு.க. அரசு எழுதிய கடிதத்தால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியன் ஏயார் லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் துணைக்கு ஒரு பெண் மட்டுமே வந்திருந்தார்.

பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக 6 மாத கால இந்திய விசாவில் வந்த பார்வதி அம்மாவை விமானத்திலிருந்து இறங்கக்கூட குடியேற்றத்துறை அதிகாரிகளும் தமிழக பொலிசாரும் அனுமதிக்கவில்லை.

அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரையும் பொலிசார் அனுமதிக்கவில்லை.

பார்வதி அம்மாவுடன் உரிய விசா பெற்றுவந்த அந்தப் பெண்ணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரப்பியது இந்த நிகழ்வு. உரிய அனுமதி பெற்றுவந்த, அதுவும் உயிருக்குப் போராடும், நடக்கவும் மூச்சு விடவும் சிரமப்படும் ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்தக் கொடுமையைப் பலரும் கண்டித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக