21 ஏப்ரல், 2010

இமாச்சல பிரதேசத்தில் நித்தியானந்தா கைது


இமாச்சல பிரதேசத்தில் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இமாச்சல பிரதேச பொலிசாரின் உதவியுடன் கர்நாடக பொலிசார் அவரைக் கைது செய்தனர். சோலன் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதிலிருந்து தலைமறைவாக இருந்தார் நித்தியானந்தா.

தமிழகத்தில் நித்தியானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து கர்நாடக பொலிசார் நித்தியானந்த ஆசிரமத்தில் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. பொலிசார் கைது செய்வதற்காகத் தன்னைத் தேடி வருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும், அவரைக் கைது செய்வதில் பெங்களூர் பொலிசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்தியானந்தா இருக்கிறாரா என்பதைக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்தா, இமாச்சலப் பிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி பொலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நித்தியானந்தாவைக் கைது செய்ய, இமாச்சலபிரதேச பொலிசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து, நித்தியானந்தாவை கர்நாடகப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக