21 ஏப்ரல், 2010

ஐஸ்லாந்து எரிமலைக்குமுறல் லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட், ரோம் விமான சேவைகள் ரத்து

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய த்திலிருந்து நேற்று லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட் மற்றும் ரோமுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் நேற்று 5வது நாளாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட சாம்பல் தூசு காரணமாக கட ந்த சில நாட்களாக 64 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐரோப்பிய மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று ஐந்தாவது நாளாகவும் கொழும்பு – லண்டனுக்கி டையிலான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய முகாமையாளர் நேற்று தெரிவித்தார்.

இருப்பினும், நேற்று மாலை லண்டன் நோக்கி புறப்படவிருந்த மற்றுமொரு ஸ்ரீலங்கன் விமான சேவைக்குரிய விமானமொன்று நேற்று நள்ளிரவின் பின்னர் சுமார் 1.00 மணியளவில் புறப்பட தயாரானது என்றும் இறுதி நேரம் வரையில் விமானம் புறப்படுமா? என்பது பற்றி தெரிவிக்க முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக