21 ஏப்ரல், 2010

இந்தோனேஷியாவில் விமானம் மோதி இருவர் பலி

:

இந்தோனேஷியாவில் தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் விமானம் தரை இறங்கிய போது இரு சக்கர வாகனத்தில் குறுக்கே வந்த இருவர் விமானம் மோதி உயிரிழந்தனர்.
அரசு நடத்தும் விமான பயிற்சிக் கல்லூரிக்கு சொந்தமான டொபாகோ-10 என்ற இலகு ரக பயிற்சி விமானம் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் தரை இறங்கியது.
அப்போது உள்ளூர் வாசிகள் இருவர் இரு சக்கர வாகனத்தில் குறுக்கே வந்துவிட்டனர். அவர்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானதில் இருந்த விமானியும், ஒரு மாணவரும் பலத்த காயமடைந்துனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த இந்தோனேஷியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹெரி பக்தி சிங்கயுடா, "விபத்து நடந்த பகுதி பொதுமக்கள் வர தடை செய்யப்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை கவனிக்காமல் இருந்தது அதிகாரிகளின் தவறாகும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக