21 ஏப்ரல், 2010

நடுவானில் இரு ஹெலிகொப்டர்கள் மோதியதில் அறுவர் பலி : பிரேசிலில் சம்பவம்




கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மற்றுமொரு ஹெலிகொப்டர் அதன் மீது மோதி இரண்டும் விழுந்து நொறுங்கின.

இவற்றில் பயணித்த 5 இராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் தொழில் நுட்ப குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.

கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவ ஹெலி பிரேசில் நாட்டில் உள்ள சாபரல் நகரின் மீது பறந்து கொண்டிருந்த போது, இதன் மீது மற்றுமொரு ஹெலிகொப்டர் மோதியதால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக