21 ஏப்ரல், 2010

இந்தோனேசிய மெராக் துறைமுகத்திலிருந்து 139பேர் சிங்கப்பூர் கியூ துறைமுகத்திற்கு மாற்றம்-





இந்தோனேசிய மெராக் துறைமுகத்திலிருந்து இன்று 139பேர் 10பேருந்துகளில் ஏற்றப்பட்டு சிங்கப்பூர் கியூ துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு எஞ்சியுள்ளவர்களே கப்பலிலிருந்து இறக்கப்பட்டு குறித்த தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்தவருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்லவிருந்த 254பேர் அவுஸ்திரேலிய பிரதமரின் பணிப்பின்பேரில் இந்தோனேசியா படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் கப்பலிலிருந்து இறங்க மறுப்புத் தெரிவித்து கடந்த ஆறுமாத காலமாக இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திலேயே தங்கியிருந்தனர். இவர்கள் தம்மை அவுஸ்திரேலியா அல்லது அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திட்ட நாடொன்றில் குடியேற்றுமாறு கோரிவந்தனர். இதனைச் செவிமடுக்காத இந்தோனேசிய அரசு தற்போது இந்த அகதிகளை கியூ தீவுக்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையையடுத்து கப்பலில் இருந்தவர்களில் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக