21 ஏப்ரல், 2010

26இல் முதலாவது பொலிஸ் கல்லூரி கட்டானையில் திறப்பு




நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26 ஆம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

பொலிஸ் சேவையை மேலும் செயற்திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்பவே பொலிஸ் கல்லுர்ரி அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனைத் திறந்து வைப்பார். இக்கல்லூரி ஊடாக பொலிஸ் சேவையில் உள்ளவர்களுக்கு அவர்களின் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் வகை செய்யப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 26 ஆம் திகதி முதல் சிரேஷ்ட துப்பறியும் பாடநெறி மற்றும் கனிஷ்ட துப்பறியும் பாடநெறியை இக்கல்லூரி ஊடாக மேற்கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக