25 ஜூன், 2010

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமிழ்கட்சிகள் சந்திப்பு!





தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும் நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர். மிகவும் அற்புதமான ஏற்பாடு டக்ளஸ் தேவானந்தாவிற்கு எமது நன்றிகள் அத்துடன் எமது பாராட்டுக்களும்

மற்றும் அன்பான கட்சி தலைவர்களே நீங்கள் தனித்து நின்று போட்டியிட்டு
எதை சாதித்தீர்கள் வாக்குகளை சிதறடித்தது தான் மிச்சம் ஆகவே நீங்கள் இதில் கூடியுள்ள அனைவரும்25 .30 .வருடங்களாக மக்களுக்காக கஸ்ரப்பட்டிர்கள் இனி யாவது உங்களுக்குள் பேசி ஒரு முடிவு எடுங்கள் நீங்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒருவர் தான் முதல்வர் ஆக முடியும் ஆகவே நீங்கள் அனைவரும் பேசிஒரு முடிவுக்கு வந்தால் ஒரு நல்ல கூட்டணியை உருவாக்கமுடியும் மக்களுக்கும் நல்லதை செய்யவும் முடியும்
உங்களுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தால் அவைகளை மறவுங்கள் மக்கள் நலனை சிந்தியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக