25 ஜூன், 2010

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்குக் கல்முனையில் வீடுகள் கையளிப்பு

சுனாமி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வந்த 100 பேருக்கு கல்முனை இறையடிக்கண்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு, நீண்ட நாட்களாய் திறக்கப்படாதிருந்த் 100 வீடுகள் கையளிக்கப்பட்டன.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 456 வீடுகளையும் திறக்குமாறு கோரி கடந்த வாரம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக