25 ஜூன், 2010

சீது விஞாயகர் குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயம் இராணுவத்தினரால் மக்களிடம் இன்று கையளிப்பு

இராணுவத்தினரால் புணர்நிர்மானம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சீது விஞாயகர் குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயம் பொஷன் தினமான இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களினால் மேற்படி ஆலயம் சிதைந்து காணப்பட்டது. அப் பகுதியில் உள்ள இராணுவத்தின் 19ஆவது விஜயபாகு படையினர் கோவிலை புணர் நிர்மானம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவில் இன்று மக்களிடம் கையளிக்கட்டது. இராணுவத்தின் 212 ஆவது படைப்பிரிவு அதிகாரி கேணல் எம்.ஏ.எஸ்.கே முகந்திரம், இராணுவத்தின் 19 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மேஜர் கயனந்த் உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து விஷேட பூஜை இடம் பெற்றது. சீது விஞாயகர் குளம் கிராமம், கூராய் ஆகிய கிராமங்களின் 50 குடும்பங்களுக்கு இரணுவத்தினரால் கோயில் வளாகத்தில் வைத்து உளர் உணவுப் பொதிகளும், விவசாயக் கருவிகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது 50 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக