25 ஜூன், 2010

ஜூலை 14ல் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம் நடத்த அரசு தீர்மானம்






அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை எதிர்வரும் ஜூலை 14 ம் திகதி கிளிநொச்சி நகரில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்நாள் சகல அமைச்சுக்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையொன்றை நடத்தி அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

அமைச்சரவை மாநாடுகள் தொடர்ந்து கொழும்பிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் ஒவ்வொரு பிரதேசங்களில் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்தார். இதன்படி, முதலாவது அமைச்சரவை கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படும். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டையும் அங்கேயே நடத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக