25 ஜூன், 2010

மீள்குடியேறிய மட்டு. வாசிகளுக்கு வாழ்வாதார உதவிகள்





வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த பின்னர் மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மட்டு. வாசிகளுக்கு 30 லட்சம் ருபா பெறுமதியான வாழ்வாதார நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு எகெட் நிறுவனம் இந்நிவாரண உதவிகளை வழங்கியது. .கத்கோலிக்க மண்டபத்தில் எகெட் பணிப்பாளர் அருட்தந்தை எஸ்.சில்வெஸ்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்ற வைபவத்தின் போது இவை கையளிக்கப்பட்டன. நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக