25 ஜூன், 2010

உணவு விஷமானதால் 19 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா செட்டிகுளம், மாங்குளம் அல்ஹாமியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நேற்று மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் 19 பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் பாடசாலையில் போசாக்குணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு சமைத்து வழங்கப்படுவது வழமை. அந்த வகையில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாகச் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையின்போது மாணவர்கள் உட்கொண்ட உணவு விஷமாகியதே மயக்கத்துக்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவை பரிசோதித்தபோது அதனுள் பல்லியொன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. உணவு சமைக்கும்போது பல்லி அதற்குள் விழுந்தமையினாலேயே உணவு விஷமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக