25 ஜூன், 2010

முன்னேறும் சமூகமாக மாற்றம் காண்போம்


எம்மைப் பீடித்துள்ள யுத்தத்துக்கு பின்னரான மன உளைச்சலை ஒழித்து விட்டு கலாசார மற்றும் மதரீதியில் முன்னேறும் சமூகமாக எம்மை மாற்றிக்கொள்ள அனைத்து சமூகத்தின ரும் இந்த பொஸன் போயா தினத்தை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்வோம், என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன விடுத்துள்ள பொஸன் செய்தியில் கூறியுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,

அரஹத் மஹிந்த தேரரின் வருகையை அடுத்து நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மத, கலாசார மற்றும் இன ரீதியிலான மறுமலர்ச்சியை போன்று இன்று நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையிலான மஹிந்த யுகமொன்றைக்காண முடிகிறது.

ஜனாதிபதியின் ஆளுமையின் கீழ் தீரமிக்க படையினரின் கடப்பாட்டுடன் விடுவிக்கப்பட்ட இந்த சுதந்திர நாட்டினை மேம்படுத்தும் நோக்கில் நாம் 2318 ஆண்டுகளுக்கு முன்அரஹத் மஹிந்தவினால் இல்கை மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத் தப்பட்ட பெளத்த தர்மத்தை சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் அவரது பொஸன் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக