24 ஜூன், 2010

சிகரெட் - மதுபான விலைகள் அதிகரிப்பு : அரசு அறிவிப்பு



சிகரெட் மற்றும் சகல மதுபான வகைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் சிகரட்டின் விலை ஒரு ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மதுபான லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மதுபானங்கள் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 50 தொடக்கம் ரூபா 80 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களுக்கான வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பே சிகரட் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வுக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்களான சமையல் வாயு, பால்மா, கோதுமை மா, பாண் போன்றவற்றின் விலைகள் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் துண்டுவிழும் தொகையை ஈடு செய்வதற்காகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன எனப் பரவலாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக