9 டிசம்பர், 2010

மக்கள் தற்போதுதான் நிறைய துன்பங்களை அனுபவிக்கின்றனர்: சிறிதரன்

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களை விட தற்போது தான் அதிக துன்பங்களை அனுபவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால மற்றும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையற்றிய அவர்,

"கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தை விட தற்போது தான் மக்கள் அதிகளவு துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகள் இராணுவ ஸ்தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. மேலும் சனல் 4 தொலைக்காட்சியில் பல தமிழ் யுவதிகள் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே ஒரு சிங்கள சமூகத்தில் நடைபெற்றிருக்குமாயின் நீங்கள் பொறுத்துக் கொண்டு இருப்பீர்களா?

தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான வட, கிழக்கில் அரசில் தீர்வு இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினரால் எதிர் கட்சிகளின் கருத்துக்கு ஆதரவு வழங்குவது இல்லை. சத்தம், கூச்சல் போட்டு சபை நடவடிக்கைகளைக் குழப்புகின்றனர். இது ஜனநாயகத்திற்குப் பொறுத்தமற்றதொரு செயலாகும்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக