9 டிசம்பர், 2010

உடுவிலில் காணாமல் போன இரு மாணவர்கள் யாழ். நகரில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், உடுவிலில் பகுதியில் காணாமல் போன சிறுவர்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஜெயக்குமார் சிந்துஜன் (வயது 12) , ஞானசேகரம் நியந்தன் (வயது 12) ஆகிய இருவருமே மீட்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் யாழ். இணுவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எனவும் கடந்த 6 ஆம் திகதி தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற போது காணாமற் போனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்ததுடன் ஊடகங்களில் விளம்பரமும் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை யாழ். பஸ் நிலையத்திற்கு பஸ்ஸில் வந்திருந்த இம் மாணவர்கள் இருவரையும் யாழ். பஸ் நிலைய பகுதியில் அமைந்த தேனீர்க் கடை உரிமையாளர்கள் இனங்கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

யாழ். பொலிஸார் இருவரையும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக