9 டிசம்பர், 2010

ஜனாதிபதிக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பாரிய பேரணி

இங்கிலாந்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டில் உரைநிகழ்த்த தடுத்தமை ஆகிய வற்றை கண்டித்து மட்டக்களப்பு நகரில் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெருமளவிலான பெண்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளைகள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக மாறி திருமலைவீதியூடாக சென்று மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகத்திற்கு சென்று லண்டன் தூதுவரிடம் கையளிப்பதற்கான மகஜர் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்ட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக