9 டிசம்பர், 2010

சர்வதேச ரீதியிலும் புகழ் பெறும் வகையில் மஹிந்த சிந்தனையே அரசாங்கத்தின் கொள்கை






தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் புகழ்பெறக் கூடிய வகையில் மாணவர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே தமது பேரவா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.

நேற்றைய தினம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற 2011 ம் ஆண்டிற்கான பாட நூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் கொழும்பிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியதுடன் அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பிள்ளைகளே! நீங்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை நூல்கள் உங்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். உலகிலேயே கொள்ளையிட முடியாத சொத்து அறிவும் கல்வியும் மட்டுமே. ஆதலால் நீங்கள் சிறப்பாகக் கற்க வேண்டும்.

எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்கள் புகழ் ஓங்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பெற் றோர்களை மறந்துவிடக் கூடாது. உங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்க ளையும் மறக்கக் கூடாது.

அதே போன்று தாய் நாட்டையும் மறந்து விடக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். உங் கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர் காலம் உருவாகட்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக