9 டிசம்பர், 2010

தாய்லாந்தில் 50 இலங்கையர்கள் கைது

தாய்லாந்தில் ஐம்பது இலங்கையர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 50 பேரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இருக்கலாம் என்றும் தாய்லாந்துப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பெங்கொக் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தனர். இலங்கையிலிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்தே குறித்த பிரதேசம் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஐம்பது பேரும் சட்ட விரோதமாக தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளதுடன், வாடகை அறைகளில் ஒழிந்து கொண்டு வசித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுப் பணியகத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக