10 டிசம்பர், 2010

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை சம்பா ரூ. 70; நாடு ரூ. 60




அரசாங்கம் நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை கொண்டு வந்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

இதன்படி, கல் மணல் அகற்றப்பட்ட மற்றும் சுத்தம் செய்யப்பட்ட சம்பா (கீறி சம்பா மற்றும் சீரக சம்பா தவிர்ந்த) ஒரு கிலோ அரிசியின் உச்ச சில்லறை விலை 70 ரூபாவாகும், நாட்டரிசி, சிவப்பு பச்சரிசி மற்றும் வெள்ளை பச்சரிசி என்பவற்றிகான உச்ச சில்லறை விலை 60 ரூபாவாகும்.

அரிசிக்கான விலை அதிகரிக்குமானால் 24 மணித்தியாலங்களுக்குள் அரிசிக்கு கட்டப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 06ம் திகதி கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதியளித்திருந்தார் இதன் பிரகாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப் பட்டுள்ளது.

முன்பு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது தனது தனி முடிவல்ல என்றும், அது உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் கட்டுப்பாட்டு கமிட்டியின் ஏகோபித்த முடிவு என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

பண்டிகைக் காலங்களில் முறையற்ற விதத்தில் முறைகேடாக விலைகளை அதிகரித்து இலாபமீட்டி நுகர்வோரை கஷ்டத்திற்கு உள்ளாக்குவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக