9 டிசம்பர், 2010

அவசர கால சட்டம் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜே. வி. பி. யும் ஐ. தே. க. வும் எதிராக வாக்களித்தன.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்துடன் அவசர காலச் சட்ட பிரேரணை மீதான விவாதமும் ஒன்றாக நடைபெற்றன.

பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டம் மீதான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக