9 டிசம்பர், 2010

தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் ஜயலத்தையும் கைது செய்யுங்கள்: விக்கிரமபாகு

நாட்டுக்கு எதிராக தேசத்துரோக குற்றம் செய்திருந்தால் என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனாவையும் கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றேன் என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமாபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

தனிப்பட்ட அழைப்பின்பேரில் லண்டனுக்கு சென்றிருந்தேன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டு லண்டன் வந்திருந்தார். ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அரசாங்கம் தனது முட்டாள் தனத்தை மறைத்துக்கொள்ள என் மீதும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மீதும் பழி சுமத்துகின்றது. நாங்கள் ஏதேனும் தேசத்துரோக செயலில் ஈடுபட்டிருந்தால் எம் மீது வழக்குத் தொடரமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக