9 டிசம்பர், 2010

கண்டி, களுத்துறை, காலி, மாத்தளை, கேகாலை: மலைசார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்; எச்சரிக்கை


அடை மழை பெய்து வருவதால் மலை சார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப் பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இதன் காரணத்தினால் கண்டி, களுத்துறை, மாத்தளை, காலி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களில் கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 61 மண் சரிவுகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, கண்டி மாவட்டத்தில் 90 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 40 வீடுகளும், மாத்தளை மாவட்டத்தில் ஒரு வீடுமென 131 வீடுகள் மண்சரிவு ஆபத்து மிக்க பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தில் ஓரளவு மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் 30 வீடுகளும் அமைந்துள்ளன.

இவ்வீடுகளில் வாழ்பவர்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிபாரிசுகளை அந்தந்த பிரதேச செயலகங் களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக