9 டிசம்பர், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ் கட்சிகள் அரங்கம் சனிக்கிழமை சந்திப்பு

தமிழ்க் கட்சி அரங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தாகவும் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குருபரன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக