23 செப்டம்பர், 2010

காஷ்மீரில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: ஐ.நா.



கடந்த 4 மாதங்களாக காஷ்மீரில் தொடரும் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியம் என்று ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். காஷ்மீரில் தொடரும் வன்முறை தொடர்பாக பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்விதம் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீரில் நடந்த வன்முறையில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். இது கவலை அளிக்கக்கூடிய விசயம். இனிமேலும் காஷ்மீரில் வன்முறை தொடர இடம் தரக்கூடாது. வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். சமுகமான முறையில் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். காஷ்மீரில் பிரச்னை வெடித்ததில் இருந்தே அங்கு நிலவும் சூழலை பான் கீ மூன் கூர்ந்து கவனித்து வருவதாக அவரின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக