23 செப்டம்பர், 2010

நாகதாழ்வு கிராம மக்கள் 20 வருடத்திற்கு பின் மீண்டும் மீள்குடியேற்றம்

மாந்தை நாகதாழ்வு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த இடங்களில் இன்று மீள்குயேற்றம் செய்யப்பட்டனர்.

மன்னார் நகரப்பகுதியில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேசச் செயலாளர் ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

இவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டதோடு வாழ்வுதய அமைப்பினால் தற்காலிக கொட்டில்களும் அமைத்து கொடுக்கப்படுகின்றது.

மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரும் பல உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 20 ஆம் திகதி 52 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக