23 செப்டம்பர், 2010

கொண்டச்சி மீள்குடியேற்றப் பகுதியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சி பகுதியில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் நலன்கருதி, அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான றிஷாத் பதியுதீன் புதிய தற்காலிக பாடசாலை செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் உட்பட பாடசாலை சீருடை என்பவற்றையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக